வடசென்னை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற கொளத்தூர் பகுதி தமுமுகவினர், பொரம்பூர் ரஹ்மானியா கபஸ்தானில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படி நல்லடக்கம் செய்தனர்.
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரை அடக்கம் செய்த வடசென்னை திருவிக நகர் தமுமுகவினர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்ணா நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவிக நகர் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரியமுறையில் வியாசர்பாடி கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்த வடசென்னை இராயபுரம் தமுமுகவினர்
வடசென்னை கொடுங்கையூரில் உள்ள KVT தனியார் மருத்துவமனையில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இராயபுரம் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரிய முறையில் பழைய வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.
Read More »வடசென்னை பெரம்பூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் தமுமுக சார்பாக முத்தமிழ் நகரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சுமார் 1200 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நோய் பரவலை தடுக்கும் விதமாக சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் உடலை அடக்கம் செய்த வடசென்னை தமுமுக
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மணலியை சேர்ந்த 47 வயதுடைய பாஸ்கர் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (15/07/2020) சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உறவினர்கள் வேண்டுகோளின் படி அவரின் உடலை பெற்ற வடசென்னை இராயபுரம் பகுதி தமுமுகவினர், உரியமுறைப்படி அவர்களின் மத அடிப்படையில் மீஞ்சூரில் தகனம் செய்தனர்.
Read More »கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்த வடசென்னை தமுமுகவினர்
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த அர்தீஃப் முஹம்மது என்ற 19 வயது நிரம்பிய வாலிபர் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை ஆர்கே நகர் பகுதி தமுமுகவினர் உரிய முறையில் காசிமேடு கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.
Read More »ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் நோய் கிருமியை அழிக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது
Read More »இராயபுரம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி 53-வது வட்டம் தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சுமார் 500 நபர்களுக்கு கபசுர குடிநீரும் மற்றும் சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது
Read More »பெரம்பூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக
வடசென்னை பெரம்பூர் பகுதி 36-வது வட்டம் தமுமுகவின் சார்பாக, அதிகமாக வடசென்னையில் பரவிவரும் கொரானா நோய் தொற்றை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Read More »வறுமையால் வாடிய திருநங்கைகளுக்கு உதவிய வடசென்னை தமுமுக
கொரானா அதிகம் பாதித்த இடமான வடசென்னை வியாசார்பாடியில் கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலையின்றி திருநங்கைகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வடசென்னை மாவட்ட தமுமுகவினர் மளிகை தொகுப்புகளை வருமானமின்றி வாடிய திருநங்கைகளுக்கு வழங்கினர். மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹிலால், மாவட்ட தமுமுக து.செயலாளர் குணங்குடி முஹைதீன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சௌக்கத் அலி, பெரம்பூர் பகுதி தலைவர் முஹம்மது ஹிலால் உடனிருந்தனர்.
Read More »