– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும். சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது. …
Read More »Monthly Archives: May 2022
பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!
31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர். விடுதலைக்காக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுதற்காக பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கூறினர். இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மமக துணைப் பொதுச் செயலாளர் மதுரை கௌஸ், தமுமுக மாநில செயலாளர்கள் கோவை சாதிக், மைதீன் சேட்கான், தலைமை அலுவலக செயலாளர் …
Read More »சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!
தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை 117 அடியாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் …
Read More »முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை! பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு..
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி பன்வாரிலால் ஜெயின் என்பவரை ” நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக்காட்டு ” என்று சொல்லி பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், சரமாரியாகத்தாக்கி படுகொலைச் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு …
Read More »பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை இந்து மக்களின் வழிபாட்டிற்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு சுத்தம் செய்யும் தண்ணீர் குளத்தின் நடுவில் உள்ள தண்ணீர் கம்பத்தை சிவலிங்கம் என்று கூறி அதனை சீல் வைக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வழக்கு …
Read More »TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத்
TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத் இன்று தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் #சிறப்பு_அழைப்பாளராக பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகரும் பன்னூல் ஆசிரியரும் IWF இன் மகளிர் அணி செயலாளருமான ஃபஜிலா ஆசாத் அவர்களும் மாநில மகளிர் அணி செயலாளர் மரியம் நிஷா அவர்களும் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நசீமா …
Read More »பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம்விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் …
Read More »கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் …
Read More »நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்து அதன் விலையைக் கட்டுப்படுத்தி பின்னலாடை உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் 20 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நூல் விலை 480 ரூபாய் என வரலாறு காணாத உச்ச நிலையை …
Read More »ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதை எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய சரஸ்வதி என்பவர் மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன …
Read More »