இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் அதிகமான படகுகளில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கின்றேன்.
தமிழக மீனவர்களைத் தாக்கியது மட்டுமில்லாமல் அவர்களது மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் தமிழக மீனவர்கள் படுகாயமடைந்தும், மீன்பிடி வலைகள் நாசமானதால் வாழ்வாதாரத்தை இழந்தும் உள்ளனர்.
தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடராத வகையில் ராஜாங்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி