தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக தமுமுக கொரோனா காலத்தில் செய்த சேவையை பாராட்டியும், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த பணிகளை பாராட்டியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான கவச உடைகளை செலஸ்டியல் ஹவுஸ் தொண்டு நிறுவனம் சார்பாக ஆசிரியர் ஜபரூல்லாஹ் அவர்கள் தமுமுக மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் மற்றும் மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா ஆகியோர்களிடம் வழங்கினர். மாவட்ட மமக துணை செயலாளர் பாஸீத், கடையநல்லூர் நகர தமுமுக செயலாளர் மசூது, நகர மமக செயலாளர் பாஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …