
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டல மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி 04.03.2010 அன்று ஷார்ஜா ரொடானா ஹோட்டலுக்கு எதிர்புறமுள்ள நத்தானி மெடிக்கல் சென்டர் பில்டிங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முமுக-வின் அமீரக துணைத் தலைவர் ஹுசைன் பாஷா தலைமை வகித்தார். அடுத்ததாக அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் நாஸர் அலிகான் உரையாற்றினார்.
இதுநாள் வரை ஷார்ஜா IAC-ல் வியாழன் தோறும் இரவு 09.30-10.30 வரை நடைபெற்று வந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடமாற்றத்தின் காரணமாக முமுக மர்கஸில் இனி நடைபெறும் என மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் கூறினார். பெண்களுக்கென தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் பெண்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
இதுநாள் வரை ஷார்ஜா IAC-ல் வியாழன் தோறும் இரவு 09.30-10.30 வரை நடைபெற்று வந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடமாற்றத்தின் காரணமாக முமுக மர்கஸில் இனி நடைபெறும் என மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் கூறினார். பெண்களுக்கென தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் பெண்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!





